சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் ம. சிங்காரவேலர். இந்தியாவில் மே தினத்தை முதல் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர். மாபெரும் சுதந்திரப்போராட்ட வீரர்.

Saturday, May 20, 2006

கடவுள் சிருஷ்டியா?

கடவுள் சிருஷ்டியா?

ம.சிங்காரவேலர்

“டார்வின் பரிணாம சித்தாந்தமும்ஸர், அம்பிரோ° பிலமிங் (பிளெமிங்) விஞ்ஞானி யும், ஸர் அம்பிரோஸ பிலமிங் என்பவர் ஒரு பிரபல விஞ்ஞானி. இவர் தனது விஞ்ஞான புல மைக்காக அநேக பிரபல பரிசுகள் பெற்றவர். இவ ரது சிறந்த வல்லமையை முக்கியமாக ஆகாய தந்தி விஷயமாக காட்டியுள் ளார். இவருக்கு அநேக மாக ஆயிரம் டாலர் மதிப் புள்ள பரிசு இரண்டு இவ ருடைய சாமார்த்தியத் திற்காக கிடைக்கப் பெற் றுள்ளது. இந்தியாதி சிறப்பு வாய்ந்த விஞ்ஞானி.
மத அனு கூலமாக டார்வின் சித்தாந்தங் களில் முதன்மையான மனித உற்பவ சித்தாந்தத் தைக் தாக்கிப் பேசினார். அதற்கு விடையாக உயிர் மெஞ்ஞானங்களில் சிறந்த வராகிய ஸர் ஆர்தர் கீத் பதில் எழுதிய காலத்தில் பலமாக கண்டுபிடித்துள் ளார் ஸர் அம்பிரோ°.
பைபிளில் கூறியுள்ள படி, கடவுள் மனிதனை தன் உருவத்தைப் போல சிருஷ்டி செய்ததாக சொல்லி இருப்பது உண்மை என்றும், டார்வின் சித் தாந்தப்படி ஆதி குரங்கு வடிவமே மனிதனாக மாறி இருக்க முடியாது என்றும் கூறுகின்றோம்.
இந்தப் பிரபல தர்க்க வாதத்தில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மனிதன் 6000 வருஷங்களுக்கு முன் கடவுளால் மண்ணைக் கொண்டு சிருஷ்டிக்கப் பட்டானா? அல்லது 6 கோடி வருஷங்களாக சிறு மிருகங்களிலிருந்து உருவம் மாறி வந்தானா என்பதுதான்.
மனிதன் கடவுள் உரு வத்தைப் போல் சிருஷ் டிக்கப்ட்டவனென்றால், கடவுள் உருவம் சைவக் காரன் முகத்தைப் போன் றாகிலும் அல்லது பாபிரி முகத்தைப் போன்றாகி லும் அல்லது தமிழ் நாட் டுத் திராவிடன் முகத் தைப் போன்றாகிலும் அல்லது அய்ரோப்பியன் முகத்தைப் போன்றாகி லும் பெற்றிருந்தாரா என்று கேட்கின்றோம்.
இவ்விதம் வித்தியாசம் கொண்ட முகங்களைப் போல் ஆதிமனிதனைப் படைக்கவில்லை என் றால், இவ்வித வித்தியா சங்கள் பிறகு ஏற்பட்டி ருக்கவேண்டும்.

பிறகு ஏற்பட்ட வித்தி யாசங்கள் மக்களுக்குள் இயற்கையாகத்தான் எழுந்திருக்கவேண்டும். இவ்வித வித்தியாசங்கள் பூர்வ மனித விஞ்ஞானி கள் சொல்வது போல சுமார் 5 அல்லது 6 லட்ச வருஷங்களாக இயற்கை யாக உண்டாயிருக்குமா னால், ஏன் அய்ந்து அல் லது ஆறு கோடி வருஷங் களுள் ஆதி மனிதன், ஆதி மிருகமொன்றிலிருந்து இயற்கையாகவே மாறி வந்திருக்கலாகாது?
இது நிற்க, கடவுள் உருவத்தைப் போல் சிருஷ் டிக்கப்பட்ட மனிதன் தனது தாய் கர்ப்பத்தில் வளரும் போது அய்ந்து ஆறு வாரம் கருவில் வாலொன்றை, கை, கால் கள் தோன்றுவதற்கு முன் காட்டிக் கொண்டு வரு வானேன்?
கடவுள் சிருஷ்டி என் றால், அவர் உருவத்திற்கு ஒரு காலத்தில் வாலொன்று இருத்தல் வேண்டு மென்றோ?
இந்த சிருஷ்டி சித் தாந்தத்தின் ஆபாசத்தை மதாபிமானிகள் ஏன் கவனிப்பதில்லை? ஆசை வெட்கம் அறியாது என்ற ஒரு முதியோர் வாக்கியம் உண்டு. தங்கள் வைராக் கியத்தால் மத°தர்கள் தங்கள் சிருஷ்டி சித்தாந் தத்தின் ஆபாசங்களுக்கு தங்கள் கண்களை மூடிக் கொள்ளுகிறார்கள். தங் கள் மதங்களின் ஆபாசங் களுக்குத் தங்கள் கண் களை மூடிக் கொள்ளா மல் விழித்துப் பார்ப்பார் களாகில் உலகம் எவ்வ ளவோ சீரடைந்தவிடும் என்று பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த பேரறிவாளர் ம. சிங்கார வேலர் கூறிய கருத்துக் களை இன்று வரை கிறி° தவ மதத்தினரால் மறுக்க முடியில்லையே? ஏன்?

- “புது உலகம் ஏடு” மே 1935
நன்றி : விடுதலை

0 Comments:

Post a Comment

<< Home